மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் உற்சவர் வித்யாராஜகோபாலன் ருக்மணி, சத்யபாமாவுடன் மாடுமேய்க்கும் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
மன்னார்குடி ராஜகோபாலசாமி
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் செங்கமலத்தாயார் கோபுரம், மண்டபம், பிரகாரம் முதலியவற்றை மன்னன் ராஜசேகரன் கட்டிக் கொடுத்தார். ராஜசேகர மன்னனின் மகன் சுவர்ணலதாமணியும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு குழந்தை பேறு பெற்றதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அதன்படி இன்றும் குழந்தை பேறு வேண்டி வருபவர்களுக்கு குழந்தை வடிவில் உள்ள சந்தான கிருஷ்ணனை மடியில் எழுந்தருளச் செய்கின்றனர்.
மூலவர் சன்னதியில் திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளை போல மூலவர் பரவாசுதேவ பெருமாள் காட்சி தருகிறார். உற்சவர் வித்யாராஜகோபாலன் ருக்மணி,சத்யபாமாவுடன் மாடுமேய்க்கும் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
Leave a Reply
View Comments