By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Kallakurichi NewsKallakurichi NewsKallakurichi News
Notification Show More
Font ResizerAa
  • News
  • Gold RateLive
  • Contact
  • My Bookmarks
    • My Interests
    • My Feed
    • History
Reading: புதிதாக தஞ்சை மாவட்டத்தில் 29 மாணவர்களுக்கு கொரோனா …
Share
Font ResizerAa
Kallakurichi NewsKallakurichi News
  • News
  • Gold RateLive
  • Contact
  • My Bookmarks
Search
  • News
  • Gold RateLive
  • Contact
  • My Bookmarks
    • My Interests
    • My Feed
    • History
Have an existing account? Sign In
Follow US
News

புதிதாக தஞ்சை மாவட்டத்தில் 29 மாணவர்களுக்கு கொரோனா …

Last updated: August 17, 2022 12:52 pm
By Kallakurichi Published March 20, 2021
Share
3 Min Read
kallakurichi.news - 202103201538291914 Tamil News Tamil News Coronavirus 29 students affected in Tanjore SECVPF
SHARE

தஞ்சையில் உள்ள 2 தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 29 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு இதுவரை 148-ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் இன்று புதிதாக 29 மாணவர்களுக்கு கொரோனா

கொரோனா வைரஸ்

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவி பெறும் மகளிர் பள்ளியில் கடந்த வாரம் மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்த பள்ளியில் மட்டும் 57 மாணவிகள், 1 ஆசிரியை, மாணவிகளின் பெற்றோர் 11 பேர் என 69 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள்.

அம்மாபேட்டை பள்ளியை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. பட்டுக்கோட்டை அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர், மதுக்கூர் அடுத்த ஆலத்தூர் பள்ளியில் ஆய்வக பெண் உதவியாளர் ஒருவர், தஞ்சை தனியார் மெட்ரிக் பள்ளியில் 21 மாணவ-மாணவிகள், 2 ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் மகளிர் பள்ளியில் 2 ஆசிரியர்கள், 7 மாணவிகள், தஞ்சை தனியார் மெட்ரிக் பள்ளியில் 2 மாணவர்கள், கும்பகோணத்தில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒரு ஆசிரியை, 6 மாணவிகள், ஒரத்தநாடு மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்கள் என இதுவரை 11 பள்ளிகளில் 88 மாணவ-மாணவிகள், 26 ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதேப்போல் தஞ்சை அடுத்த வல்லம் நிகர்நிலை பல்கலை மாணவர்கள் 2 பேர், கும்பகோணம் கல்லூரியில் 4 மாணவர்கள், திருவையாறு அரசர் கல்லூரியில் மாணவி ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் நேற்று இரவு வரை பள்ளி, கல்லூரிகளை சேர்த்து 93 மாணவர்கள், 26 ஆசிரியர்கள் என 119 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு கடந்த 2 நாட்களாக முகாம்கள் அமைத்து கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது. இன்றும் பரிசோதனை தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் வந்த வண்ணம் உள்ளது. அதன்படி இன்று காலை வந்த முடிவுகளில் தஞ்சையில் உள்ள 2 தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 29 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு இதுவரை 148-ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் பலரின் முடிவுகள் வர வேண்டி உள்ளதால் பாதிப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பாதிப்புக்குள்ளான பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பரவலுக்கு காரணமாக அலட்சியமாக இருந்ததற்காக அம்மாபேட்டை அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு எற்கனவே கலெக்டர் கோவிந்தராவ் அபராதம் விதித்திருந்தார்.

இந்நிலையில் இன்று கும்பகோணத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.12 ஆயிரம், தஞ்சையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். பேரிடர் மேலாண்மை சட்டத்தை முறையாக அமல்படுத்தாத காரணத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பல பள்ளிகளில் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இதுவரை கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத 3 பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தஞ்சை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா இருப்பது 2 நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. அதற்கு முந்தைய நாள் அவர் திருச்சியில் உள்ள தனது கணவரை பார்க்க சென்றுள்ளார். தற்போது அவருக்கும் கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்மாபேட்டை பள்ளி மாணவிகள் 51 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். தொடர்ந்து மற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 10 நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவின் வேகம் கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் பெற்றோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

You Might Also Like

Operation Sindoor: India Neutralises Lahore’s Defence

Kallakurichi Gold Rate Today: Live 22 & 24 Carat Prices Updated!

கோஹெரென்ட் சி.இ.ஓ. ஜிம் ஆண்டர்சன்: $101.5 மில்லியன் ஊதியம் 2024

தமிழக அரசியல்: அமைச்சரவை மாற்றங்கள், கூட்டணி, புதிய கட்சிகள்

 தமிழ்நாடு அமைச்சரவை: மனோ தங்கராஜ் மீண்டும் பால்வளத்துறை அமைச்சராக பதவியேற்பு

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram
Share
What do you think?
Love0
Cry0
Sad0
Happy0
Surprise0
Embarrass0
Angry0
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

Follow US

Find US on Social Medias
FacebookLike
TwitterFollow
InstagramFollow
Google NewsFollow
- Advertisement -
newsletter featured

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Subscription Form
Popular News
கல்லை உணவுத் திருவிழா 2025! மே 25 - பாரம்பரிய சுவை!
கள்ளக்குறிச்சி

கல்லை உணவுத் திருவிழா 2025! மே 25 – பாரம்பரிய சுவை!

Kallakurichi May 12, 2025
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா அணி!
தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
நீதிமன்ற வளாகத்தில் சுற்றி திறிந்த அரியவகை ஆஸ்ட்ரேலியன் ஆந்தை !
‘தி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது’ எடப்பாடி பழனிசாமி பேச்சு

Categories

  • News
  • கள்ளக்குறிச்சி
  • இந்தியா
  • தமிழகம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • விளையாட்டு

KALLAKURICHI NEWS

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து செய்திகளையும் உங்களுக்காக வழங்குகிறோம்
Quick Link
  • News
  • Gold RateLive
  • Contact
  • My Bookmarks
    • My Interests
    • My Feed
    • History
Policy
  • Privacy Policy
  • Terms of Use
  • DMCA

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Subscription Form

Kallakurichi News © All Rights Reserved - Designed by Elathi Digital.

Welcome Back!

Sign in to your account

Register Lost your password?