தற்கொலை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தழுதாழை தாழை நகரை சேர்ந்தவர் தீபக் (வயது 36). இவர் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தீபக் நேற்று காலை கிருஷ்ணாபுரம் டாஸ்மாக் கடை அருகே ஓடைப்பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் அங்கு வந்து, தீபக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.