தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 135 சதவீதம் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று கொரோனா சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 பேர் கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 135 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவலை தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த 13-ந்தேதி 695 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. கடந்த 24-ந்தேதி, 1,636 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது. இந்த 12 நாட்களில் 135 சதவீதம் கொரோனா தொற்று உயர்ந்துள்ளது.