மத்திகிரி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
மத்திகிரி அருகே உள்ள குரும்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி லட்சுமி (வயது 27). சம்பவத்தன்று லட்சுமி வீட்டில் சாப்பாடு செய்யவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கணவர் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த லட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply
View Comments